offer for you

செவ்வாய், 8 அக்டோபர், 2024

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தில் அதானி, மகிந்திரா உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமரின் தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் அதானி குழுமம், மகிந்திரா குழுமம், மாருதி சுசுகி, பெப்சி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இந்துஸ்தான் யுனிலீவர், சாம்சங், எச்.பி. உட்பட 500 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

விற்பனை, சந்தைப்படுத்துதல், தொழில்முனைவு உட்பட பல பிரிவுகளில் இந்நிறுவனங்களில் தொழில் பயிற்சி அளிக்கப்பட வுள்ளது. முழுநேர தொழிலில் ஈடுபடாத21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தை தாண்டக் கூடாது. முதுநிலைபட்டதாரிகள் இந்த தொழில் பயிற்சி திட்டத்தில் சேரமுடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8MDJfs9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now