
சென்னை: ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதத்துக்கான இயற்கை சந்தை நேற்று தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள், துணிப்பைகள், சணல் பொருட்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், எண்ணெய் வகைகள், ஊறுகாய் வகைகள், செடிகள், விதைகள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்றவை இடம்பெற உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fhRB68e
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக