
புதுடெல்லி: பண்டிகை கால கார் விற்பனை இந்தாண்டு மந்த நிலையில் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி கார் விற்பனையானது எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மந்தநிலையில் உள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் முதலே கார் விற்பனை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையுள்ள கார் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. கரோனா பேரிடருக்குப் பிறகு விற்பனை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இப்பிரிவின் பங்களிப்பானது மிக முக்கியமானதாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P8zUV6W
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக