offer for you

திங்கள், 4 நவம்பர், 2024

சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவு; 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு நிஃப்டி இறக்கம்

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 430 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகமானது.

காலை 11.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் அதாவது 1.68% சரிந்து 78,380.84ல் வர்த்தகமானது. இதேபோல், நிஃப்டி 445.30 புள்ளிகள் சரிந்து அதாவது 1.83% சரிந்து 23,859.05ல் வர்த்தகமானது. 4 மாதங்களில் இல்லாத அளவு நிஃப்டி சரிவைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8VCi4Lv
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now