
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும் குறைந்தன. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.03%, நிஃப்டி 1.07% சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
பிரிட்டானியா 7.49%, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 3.20%, என்டிபிசி 3.12%, ஹெச்டிஎஃப்சி வங்கி 2.72%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.68%, எஸ்பிஐ 2.47%, டாடா மோட்டார்ஸ் 2.47%, பஜாஜ் ஆட்டோ 2.43%, ஸ்ரீராம் பைனான்ஸ் 2.28%, மாருதி சுசூகி 2.25%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.22% என்ற அளவில் சரிவைக் கண்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LR6mXt8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக