
உதகை: குளிர்ந்த காலநிலையைக் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் கேரட், உருளைக்கிழங்கு, டர்னிப், முட்டைகோஸ் ஆகிய ஆங்கில காய்கறிகளும், ஐஸ்பெர்க், லெட்யூஸ், செல்லரி போன்ற சீன காய்கறிகளும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த வகை காய்கறிகளை, தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயிகள் அனுப்பிவருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு, சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உதகை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தமான் தீவுகளில் உதகை முட்டைகோஸ் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால், ஆர்வத்துடன் அனுப்பி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gjDxIuM
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக