offer for you

புதன், 20 நவம்பர், 2024

‘போலி அரசு வெப்சைட்’ உருவாக்கி சிறு, குறு தொழில் துறையினரை குறிவைத்து மோசடி... உஷார்!

கோவை: கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறு, சிறு தொழில்முனைவோரை குறிவைத்து சமீப காலமாக நூதன சைபர் கிரைம் நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான புகார்கள் தினமும் வருவதாக தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்முனைவோர் சங்க (டான்சியா) மாநில துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பயன்பெறும் வகையில் பதிவு செய்வதில் தொடங்கி முதலீட்டு மானியம், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அமல்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் பயன்பெற ‘உதயம்’ போன்ற அரசு ஆன்லைன் வலைதளங்களில் விவரங்களை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zrJnPhT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now