
கோவை: “எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் பொருட்களை தயாரித்து, அதனை இந்தியாவிலேயே விற்கும்போது அதன் லாபம் குறைவாக இருக்கும். அதனை டாலர் மதிப்பில் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தும்போது அவற்றின் லாபம் மேலும் அதிகமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக கோவையில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடைபெறுகிறது” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக வாங்குவோர்-விற்போர் இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடக்க விழா கோவை 'கொடிசியா' வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று நடந்தது. தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவை தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ghkmEHs
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக