
பெங்களூரு: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் களம் இறங்கியுள்ளது ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம். அதன் அடையாளமாக ஹோண்டா ‘ஆக்டிவா e’ மற்றும் ‘QCI’ என இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் தான் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ). இந்தியாவில் ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடம் இந்நிறுவனத்துக்கு அமைந்துள்ளது. இங்கிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a2kDKT6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக