
வீடு வாங்கத் தீர்மானிப்பது வாழ்க்கையில் எடுக்கும் முக்கியமான முடிவுகளில் ஒன்று. ஏனென்றால், அது உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய முடிவாக இருக்கலாம். முதல் முறையாக வீடு வாங்கும்போது எடுக்க வேண்டிய எண்ணற்ற நுண்-முடிவுகளைப் பற்றிய பயம் இருக்கும். ஆனால், வீடு வாங்கும்போது சில வழிமுறைகளைக் கையாண்டால், எந்தப் பயமுமில்லாமல் வெற்றிகரமாக வீட்டை வாங்க முடியும்.
மாதாந்திர தவணை: வீடு வாங்கும்போது முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சம் ‘இ.எம்.ஐ.’ எனப்படும் மாதாந்திரத் தவணை. இந்த மாதாந்திரத் தவணையின் சுமையைச் சரியாகத் திட்டமிட்டால் பேரளவு குறைக்க முடியும். வீடு வாங்கும்போது முன் பணமாகப் பெரிய தொகையைச் செலுத்திவிட்டால், இந்த மாதாந்திரத் தவணையைச் செலுத்தும் காலத்தையும் கடன்தொகையின் வட்டியையும் குறிப்பிட்ட அளவு குறைக்கலாம். சேமிப்புத் தொகை, முதலீடுகள் போன்றவற்றை வைத்து வீட்டுக் கடனின் முதல் தொகையைக் குறைக்க முயலலாம். அத்துடன், வருமானம் உயரும்போதும், மாதாந்திரத் தவணை செலுத்தும் சதவீதத்தைச் சற்று அதிகரிக்கலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W7UbXSy
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக