
சென்னை: தங்கத்தின் விலை ஸ்திரமான நிலையில் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வருகின்ற காரணத்தால் இந்திய குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையில் குறைந்த காரட்டில் லகுவான எடையில் தங்கத்தை வாங்குவதாக தங்க நகை சார்ந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தங்கம் விலை 15 சதவீதம் உயர்ந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qzPaM07
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக