
காரைக்குடி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், “டாலர் மதிப்பை வைத்து பொருளாதார நிலையை அளவிட முடியாது. டாலர் மதிப்பு உயர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “டாலர் மதிப்பை வைத்து பொருளாதார நிலையை அளவிட முடியாது. டாலர் மதிப்பு உயர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்றுமதியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆனால், இறக்குமதி பொருட்களின் விலை உயரும். கருப்பொருட்களின் விலை அதிகரிக்கும். பணவீக்கமும் உயரும். வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு செலவு அதிகரிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PpZ4xiq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக