
சென்னை: தமிழகத்தில் உள்ள விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட முன்னுரிமை துறைகளுக்கு 2025-26-ம் நிதியாண்டில் ரூ.9.38 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) வங்கி சார்பில், 2025-26-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்று பேசுகையில், ''மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே, இந்த இலக்கை அடைய அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள், எம்எஸ்எம்இ துறையும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H2JVagE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக