
சென்னை: பயிர் சாகுபடியில், பயிர் பாதுகாப்புப் பணிகளுக்காக மகளிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற மகளிரை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு சேவையை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய பணிகளில் வழக்கமாக பயன்படுத்தும் மருந்து தெளிப்பான்களோடு ஒப்பிடும்போது ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது மருந்தின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. தற்போது கிராமப்புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் மருந்து தெளிக்க முடிகிறது. மேலும் இம்முறையில் வழக்கமாக மருந்து தெளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவும் குறைவாகவே இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jkEezJO
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக