
புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான நிதின் காமத் நேற்று கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சில்லறை முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்படும் ஒரு பெரிய வீழ்ச்சியானது, சில்லறை முதலீட்டாளர்களை பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தைகளிலிருந்து விலக்கி வைக்கும்.
2008-ம் ஆண்டில் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு பிறகு இதே நிலைமைதான் ஏற்பட்டது. 2008-ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக மிகப்பெரிய அளவில் உலகில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதுபோன்று மீண்டும் நடந்தால் சில்லறை முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிடுவர். இவ்வாறு நிதின் காமத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PC1f4im
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக