
கிராமப்புற வீட்டுமனை வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு குறைந்த கட்டிடத் தொழில் நுட்பங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் பத்மஜா மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினர், ஆரோவில் அறக்கட்டளையை சந்தித்தனர்.
ஆரோவில்லில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவு மற்றும் புதுமையான மேற்கூரை மற்றும் சுவர் அமைப்புப் பொருட்களை நேரில் பார்வை யிட்டனர். இந்தக் குழுவில் ஏடிடிசி உறுப்பினர் சிந்து ஜா, ஏடிஎஸ்சி உறுப்பினர் அந்திம் மற்றும் ஆரோவில்லே அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர் ஸ்ரீ கோஷி வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். கனரக கான்கிரீட் இல்லாமல், இயற்கை மற்றும் நிலைக் கருவியான பொருட்களைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று மாடி கட்டமைப்புகளை எழுப்பும் தனித்துவமான கட்டுமான முறைகளை இக்குழுவினர் பார்வையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SXJwz8Y
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக