offer for you

சனி, 31 மே, 2025

நிதியமைச்சகம் பரிந்துரை: தங்க நகை கடன் புதிய விதிமுறைகள் குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிக்கிறது ரிசர்வ் வங்கி!

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளி​யிட்ட தங்க நகை கடனுக்​கான விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்து, சிறுகடன் பெறு​வோர் பயன்​பெறும் வகை​யில் தளர்​வு​களை அறிவிக்க வேண்​டும் என மத்​திய நிதி அமைச்​சகம் ரிசர்வ் வங்​கியை அறிவுறுத்தி​யுள்​ளது.

முறை​கேடு​களை தடுக்கும் நோக்கில், வங்​கி​களில் தங்க நகை கடன் பெறும் விதி​களை கடுமை​யாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்​ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளி​யிட்​டது. அதன்படி, கடன் - மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்கநகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RfQACds
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now