
புதுடெல்லி: வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைக் கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
தங்கம் ஆடம்பர பொருளாக மட்டும் அல்லாமல், மக்களின் அவசர பணத் தேவையை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக வங்கிகளில் தங்க நகைகளை அடமானமாக வைத்து குறைந்த வட்டியில் மக்கள் எளிதில் கடன் பெற முடியும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hq4bP2I
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக