
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் தனது ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளது. எனினும், அதன் பொருளாதாரம் மிகவும் வலுவிழந்து உள்ளது. இந்தியா உடனான பதற்றம் காரணமாக பாகிஸ்தானின் ராணுவச் செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால், அதை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் அந்நாடு சிக்கிக் கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GOzowlY
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக