offer for you

ஞாயிறு, 1 ஜூன், 2025

இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் மிகப் பணக்காரர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகமான அளவில் இருக்கும் என்றும் வரும் 2023 - 2028 -க்குள் அவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கும் என்று மெக்கின்சி அண்ட் கம்பெனி மற்றும் பிஓஎஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்களால் 2025 இந்திய சொகுசு பேஷன்களுக்கான சந்தை 15 முதல் 20 சதவீதம் வரை வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, ஜியோ வேர்ல்ட் பிளாசா மற்றும் கேலரீஸ் லாஃபாயேட் போன்ற புதிய சொகுசு மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் முதல் நிலை நகரங்களில் அதிகரித்து வருகின்றன. மேலும் அதில், ரூ.7 லட்சத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிகாக அறிவிக்கப்பட்ட வரிகள், உள்நாட்டு செலவினங்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் ஆடம்பர பொருட்களுக்கான ஜிஎஸ்டி இன்னும் 28 சதவீதமாக இருந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rzSFgCl
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now