offer for you

சனி, 14 ஜூன், 2025

காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா?

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யில் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதர​வற்​றவர்​கள் சாலை​யோரத்​தில் கடைகளை வைத்து நடத்​து​வதற்​காக மாநக​ராட்சி மூலம் வாங்​கப்​பட்ட ஆயத்த கடைகள் பயன்​படுத்​தப்​பாடமல் காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் மழை​யிலும், வெயி​லிலும் போட்டு வைக்​கப்​பட்​டுள்​ளன.

காஞ்​சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்து அந்த மாநக​ராட்சி மூலம் சாலை​யோரத்​தில் உடல் ஊனமுற்​றோர், விதவை​கள், கணவ​னால் கைவிடப்பட்டோர் போன்​றோர் கடை வைப்​ப​தற்​கும், அவர்​களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்​ய​வும் 50 ஆயத்த கடைகள் வாங்​கப்​பட்​டன. தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு அரசு மூலம் வழங்​கப்​பட்ட இந்த கடைகளில் மிகு​தி​யாக இருந்​தவை காஞ்​சிபுரம் மாநக​ராட்​சிக்கு எடுத்து வரப்​பட்​டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wKgW5X0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now