
இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்பட பல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் வலுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும், ஹவுதி கிளர்ச்சிப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0XCibvR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக