
கோவை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகளுக்குள் 5 சதவீத கூடுதல் சந்தையை இந்தியா பிடிக்கும் என ஜவுளித்தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: இங்கிலாந்து நாட்டுக்கான ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதி தொழிலில் வங்கதேசம், பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வரியில்லா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் இந்திய ஜவுளித்தொழில் நிறுவனங்களின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UzvEZVe
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக