
புதுடெல்லி: அரிய வகை கனிமங்களை இந்தியாவுக்கு வழங்கத் தயார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அறிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். இதைத் தொடர்ந்து அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர். அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qfZ7jMi
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக