offer for you

திங்கள், 15 செப்டம்பர், 2025

ஜிஎஸ்டி 13% வரை குறைக்கப்படுவதால் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

சென்னை: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற வர்த்தக, தொழில் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை சிட்டிசன் மன்றம் சார்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில், வர்த்தக, தொழில் சங்கங்களின் கூட்டு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசியதாவது: தினந்தோறும் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இருக்கும். அந்த வகையில், 5, 12, 18, 28 சதவீதம் என 4 பிரிவாக இருந்த ஜிஎஸ்டி விகிதங்களை தற்போது 5, 18 சதவீதம் என இரண்டே பிரிவாக கொண்டு வந்துள்ளோம். இதில் 350-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 12 சதவீதஜிஎஸ்டி பிரிவில் இருந்த 99 சதவீத பொருட்கள், 5 சதவீத பிரிவுக்குள் வந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LCGwXaK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now