offer for you

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திண்டுக்கல் மாவட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா?

மதுரையில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வளர்ச்சிப்பாதையில் சென்று மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா திண்டுக்கல் மாவட்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு 1985-ம் ஆண்டு முன்னள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம். தொடக்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா மாவட்டம் என்றும், திமுக ஆட்சிக் காலத்தில் காயிதேமில்லத் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. தொழில் வளம், விவசாயம், ஆன்மீகம், சுற்றுலா என அனைத்தும் இயற்கையிலேயே அமையப் பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uLVBywe
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now