
புதுடெல்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் இன்று அமலுக்கு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசிய தாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரி பண்டிகை தொடங்கும் இந்த நன்னாளில் (இன்று) சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மிக முக்கிய மாற்றம் தொடங்க உள்ளது. அதாவது, ஜிஎஸ்டி 2.0 வரிவிகிதம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களில் சேமிப்பு திருவிழா தொடங்குகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த பண்டிகை காலத்தில் உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bhq1ouN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக