
கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் அமலுக்கு வந்த நிலையில், ‘வெட் கிரைண்டர்’, ‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு விதிக்கப்பட்ட வரியும் 5 சதவீதமாக விரைவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தி பிரிவை சேர்ந்த தொழில்துறையினர் பல நாட்களாக முன்வைத்து வரும் கோரிக்கையான ‘வெட் கிரைண்டர்கள்’, ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்படாதது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OzFNawq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக