
புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய சந்தைக்கான தனது நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைப் பற்றி அவர் விவாதித்தார். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் உறுதி அளித்தார்.
பெப்சிகோ நிறுவனம் லிங்டுஇன் தளத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளதாவது: பெப்சிகோ தலைவர் லகுவார்ட்டாவுடன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, பெப்சிகோவின் இந்தியாவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது, உற்பத்தி, நிலைத்தன்மை, புதுமை மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VTjUNgP
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக