
புதுடெல்லி: இந்தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா விலக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பை தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்த நிகழ்சியொன்றில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: இந்திய பொருட்களின் இறக்கு மதிக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்தது. அதே போன்று மீண்டும் 25 சதவீத அபராத வரியை இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ளது. இரண்டும் எதிர்பார்க்கப்படாத ஒன்று. புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இரண்டாவது 25 சதவீத அபராத வரி விதிப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நான் இன்னும் நம்புகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fQ08l7k
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக