
கோவை: அமெரிக்க வரி விதிப்பு 45 நாட்கள் கடந்த நிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு, குறைந்த வட்டியில் கடனுதவி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விரைவில் அறிவிக்க வேண்டியது அவசியம் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின், தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது: “2021-ம் ஆண்டு வெளியான தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை தற்போது காலாவதியாகிவிட்டது. உலக வர்த்தக சூழ்நிலைகள், குறிப்பாக அமெரிக்காவின் 50 சதவீத வரி காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r70xNYT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக