
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L450lTw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக