
புதுடெல்லி: பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து வீடியோ கேமிங்கை பிரிக்க வேண்டும் என்று கோரி, பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம் எழுதி உள்ளன.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் 45 வீடியோ கேமிங் நிறுவனங்கள் எழுதி உள்ளன. இந்தக் கடிதம் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "ஆன்லைன் கேம்ஸ் என்பது மிகவும் விரிவான அர்த்தம் நிறைந்த ஒரு வார்த்தை. பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களும், வீடியோ கேம்ஸ்களும் ஆன்லைனில் விளையாடப்படுகின்றன. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. ஆனால், இதில் மிகப் பெரிய குழப்பம் பரவலாக இருக்கிறது. இரண்டும் ஆன்லைன் கேமிங் என்றே அழைக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LApMeF5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக