offer for you

புதன், 8 மே, 2024

பணியாளர்களுக்கு மோர் வழங்க தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை உத்தரவு

திருப்பூர்: வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வெப்ப அலை தணிப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/axym83J
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now