
மும்பை: அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து பங்குச்சந்தையில் திங்கள்கிழமை (ஆக.12) காலை அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிந்தன. இதனால் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் தொடங்கியது. ஏற்கெனவே பங்குச் சந்தைகள் சரிவுடனேயே தொடங்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவ்வாறே சரிந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F7EV3Tr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக