
மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச் சந்தையில் சரிவை சந்தித்த ஒருநாள் கழித்து இன்று அதானி குழுமத்தின் சில பங்குகள் சற்றே உயர்ந்தன. அதேநேரம், பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 10ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி - செபி தலைவரை மையப்படுத்தி குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனால் நேற்று திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தை கூடியதும் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அவற்றுடன் இந்திய பங்குச் சந்தையும் நேற்று காலை சரிவுடன் தொடங்கியது. எனினும், காலை 10 மணி முதல் ஏற்றம் பெற தொடங்கியது. நாளின் இறுதியில் சென்செக்ஸ் 57 புள்ளிகள் மட்டுமே சரிவை சந்தித்தது. அதேநேரம், நிப்டி 20 புள்ளிகளை இழந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bqxgSjt
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக