
புதுடெல்லி: சிங்கப்பூரின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களான டிபிஎஸ் வங்கி, தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஓமர்ஸ் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்திய - சிங்கப்பூர் அமைச்சர்களின் இரண்டவது வட்டமேஜை (ISMR-ஐஎஸ்எம்ஆர்) கூட்டம் நாளை (ஆக.26) சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே, தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தின்போது, சிங்கப்பூர் தலைவர்களுடனும் அமைச்சர்களுடனும் இந்திய அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/og6QXV2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக