offer for you

திங்கள், 23 செப்டம்பர், 2024

கோயம்பேடு சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த இரு மாதங்களாக காய்கறிகளின் விலை குறைந்து வந்தது. பல காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி காய்கறி விலை உயரத் தொடங்கியது. தற்போது பல வீடுகளில் புரட்டாசி மாதம் அசைவம் தவிர்த்து சைவத்துக்கு மாறி இருப்பதால், காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ. 22-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய், நேற்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும் விற்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PKCtFf6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now