
திருப்பூர்: ஜவுளித் துறையில் உள்ள சவால்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித் துறை செயலர் ரச்சனா ஷா உறுதிபட தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் மத்திய அரசின் ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா இன்று ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினர். முன்னதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் வரவேற்று பேசியது: “நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூரில் மட்டும் 55 சதவீதம் நடைபெறுகிறது. 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஆதரவுடன் இந்தத் துறை இன்றைக்கு உயர்ந்துள்ளது. மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பின்னலாடைத் துறை இயங்க பெரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jpNVY7W
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக