offer for you

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் 155 உரிமையாளர்கள் மீது தொழிலாளர்துறை நடவடிக்கை

கோவை: கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் குடியரசு தினத்தன்று முன்னறிவிப்பு இன்றி செயல்பட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி 155 உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கூடுதல் தலைமை செயலர், தொழிலாளர் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்களின் தலைமையில் குடியரசு தினத்தன்று கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26jxP5z
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now