
புதுடெல்லி: உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா போட்டி போட்டு வரி உயர்வை அறிவித்து வருவது வர்த்தகப் போரின் தன்மையை தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி 84 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக சீனா நேற்று அறிவித்தது. உலக நாடுகளுக்கான வரி விதிப்பு விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐரோப்பிய யூனியனுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த வரி உயர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்று சீனா தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EuipZfn
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக