
புதுடெல்லி: சீனாவுடனான வர்த்தகப் போர் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உட்பட 75 நாடுகளுக்கான கூடுதல் கட்டணங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடைநிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் தொடங்கின.
இன்றைய (வெள்ளிக்கிழமை) வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் இந்த ஏற்றம் முதலீட்டாளர்களிம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sZiNoM8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக